திருச்சியில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி வைத்தனர்!

0124.jpg

திருச்சி மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்:

பொங்கல் பரிசு தொகுப்பின் ஆரம்ப நிகழ்ச்சியில், திருச்சி மாநகராட்சி பெரிய மிளகு பாறை நியாய விலை கடையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுதல்:

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் உள்ள 8 லட்சத்து 33 ஆயிரத்து 131 அரிசி அட்டைதாரர்களுக்கும், 968 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, மற்றும் வேட்டி சேலை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணி:

இந்நிகழ்ச்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையை பின்பற்றும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன, இதன் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்க முடிந்தது. 9.1.2025 முதல் 12.1.2025 வரை பரிசு தொகுப்புகள் வழங்கப்படும். அதன்பின், 13.1.2025 அன்று பெறாதவர்கள் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.

நிகழ்வில் கலந்துகொண்டோர்:

இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், உதவி ஆட்சியர் அமித் குப்தா, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் பல மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *